img
img

மலேசியர்கள் யாரையும் அனுமதிக்காத மிகப்பெரிய தொழிற்பேட்டை குவாந்தானில். 
வியாழன் 26 அக்டோபர் 2017 13:49:32

img

கோலாலம்பூர்,

அண்மையில் தாம் குவாந்தானுக்கு சென்றபோது, மலேசியர்கள் யாரையும் அனுமதிக்காத மிகப் பெரிய தொழிற் பேட்டையை கண்டு அதிர்ச்சி யடைந்ததாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். எட்டு அடி உயரத்தில் சிமெண்ட் மதில் சுவர், ஒன்பது கிலோ மீட்டர் நீளம் கட்டப்பட்டு அதற்குள் அந்த தொழிற்பேட்டை இருப்பதாக துன் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார். அந்த சிமெண்ட் மதில் சுவரில் ஐந்து கடைகள் நீளம் கொண்ட ராட்சத விளம்பரப் பலகை உள்ளது. 

அந்த விளம்பரப் பலகையில் ஆங்கில எழுத்தும், அந்நிய மொழியும் மட்டுமே உள்ளது. நம் நாட்டில் இருக்கக் கூடிய ஒரு தொழிற் பேட்டையில் தேசிய மொழிக்கு இடமில்லை.இத்தகைய அற்பமான விஷயத்தை தேசிய மொழி காப்பகமாக இருக்கும் டேவான் பகாசா டான் புஸ்தாகாவினால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது என்பது தெரியவில்லை.

அந்த ராட்சத தொழிற்பேட்டை சுமார் மூவாயிரம் ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. இதில் ஒரு மலைப் பகுதி சேர்த்துக் கொள்ளப்படவில்லை. மதில் சுவ ரால் மறைக்கப்பட்டு இருக்கும் அந்த தொழிற் பேட்டைக்குள் நிறைய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Read More: Malaysia Nanban News Paper on 26.10.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img