கோலாலம்பூர்,
டேஷ் பயங்கரவாத அமைப் புடன் தொடர்புடைய சுமார் 346 பேர் இவ்வாண்டு அக்டோபர் மாதம் வரை கைது செய்யப்பட்டு இருப்பதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.இவர்களில் 95 மலேசியர்களும் அடங்குவர். ஈராக்கிலும் சிரியா விலும் பயங்கரவாத நடவடிக் கைகளில் 53 மலேசியர்கள் ஈடுபட்டதாகவும் அவர்களில் 34 பேர் மரணமடைந்து விட்ட தாகவும் உள்துறை அமைச்சிற்கு தகவல் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
பயங்கரவாத அச்சுறுத்தலை மலேசியா கட்டுப்படுத்துவதை உறுதிப்படுத்த, அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேம்படுத்தி வரு வதாகவும் இண்டர்போல் மற்றும் இதர நாடுகளுடன் ஒத்துழைத்து வருவதாகவும் உள்துறை அமைச்சருமான அகமட் ஜாஹிட் கூறினார்.அவர் நேற்று நாடாளுமன்ற மக்களவை கூட்டத் தொடரில் இதை தெரிவித்தார்.
கெத்ரே உறுப்பினர் டான்ஸ்ரீ அனுவார் மூசா (தேமு) எழுப்பிய ஒரு துணைக்கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்