மிகவும் குறைவான ஒதுக்கீட்டுடன், அத்தியாவசிய தேவைகள் குறைவாகக் கிடைக்கப்பெற்ற பள்ளிகளில் பாடம் கற்றுத் தரும் ஆசிரியர்கள், 2018-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தங்கள் பள்ளிகளுக்குத் தேவையான ஒதுக்கீடு வழங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
அக்டோபர் 27-ஆம் தேதியன்று மக்களவையில் அறிவிக்கப்பட விருக்கும் இந்த பட்ஜெட்டில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தங்களின் மாணவர்களின் தேவை களுக்கேற்ப ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
பள்ளிகளுக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வகுப்பறையில் பாடம் கற்றுக் கொடுப்பதற்கும் தேவையான பாடப் பொருட்களை வாங்குவதற்கும் தங்களின் சொந்தப் பணத்தையே உபயோ கிப்பதாக தொழிற்நுட்ப ஆசிரியர் ஒருவர் கூறினார்.
பள்ளிகளில் அதிவேக இணை யச் சேவை கிடைப்பதற்கான போதுமான நிதியை அரசாங்கம் வழங்க வேண்டும்.பள்ளிகளில் இணையச் சேவையின் வேகம் குறைவாக இருப்பதால், கல்வி அமைச்சு கூறியதைப் போன்று மெய்நிகர் கற்றல் சூழலில் தகவல் தொழில்நுட்பம் குறித்தான பாடங்களை மாணவர்க ளுக்கு சரிவர கற்றுத் தர இயலவில்லை என்று அந்த ஆசிரியர் மேலும் கூறினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்