தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி ஈப்போ பாராட் தொகுதி காங்கிரஸ், ஈப்போ லிட்டில் இந்தியா வர்த்தகர் சங்கம் இணை ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி கர்னிவல் நிகழ்வில் சேலை அழகு ராணி போட்டி நடை பெற்றது.
இப்போட்டியில் இறுதி சுற்றுக்கு தேர்வான ஏழு போட்டியாளர்களில் முதல் பரிசை தனியார் மருத்துவமனை ஒன்றின் தாதியான குமாரி ஹேமதர்ஷினி வெற்றி பெற்றார். இப்போட்டியில் இரண்டாவதாக லக்ஷினியும், மூன்றா வதாக புவனாவும் தேர்வு பெற்றனர். கடந்த 26 ஆண்டுகாலமாக ஈப்போ லிட்டில் இந்தியா வளாகத்தில் தீபாவளி விற்பனை சந்தை, தீபாவளி கலை பண்பாட்டு விழா நடத்தப்படுகிறது.
இந்நிகழ்வில் தீபாவளி சேலை அழகு ராணி போட்டி முக்கிய அங்கமாக நடைபெறும். இந்த ஆண்டு மலர் மணப் பெண் அலங்கார நிறுவனத்தின் இயக்குநர் மாயா மலர் ஒருங்கிணைப்பாளராக இருந்து இந்நிகழ்வை சிறப்பாக வழி நடத்தினார்.
வெற்றி பெற்றவர்களுக்கு ஈப்போ லிட்டில் இந்தியா வர்த்தக சங்கத்தின் தலைவி திருமதி கலா பாலசுப்பி ரமணியம் புவான் ஸ்ரீ ராதா ராஜூ பரிசுகளை எடுத்து வழங்கினார். ஈப்போ பாராட் மகளிர் தலைவி லட்சுமியும் கலந்து கொண்டார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்