img
img

முன்னாள் அமைச்சர் ஷாபி அப்டால் கைது.
வெள்ளி 20 அக்டோபர் 2017 12:52:31

img

கிராமப்புற மேம்பாட்டுத் துறையின் முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் நேற்றிரவு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி.) கைது செய்யப்பட்டார். அவர், சபா வாரிசான் கட்சியின் தலைவருமாவார்.

கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட வெ.150 கோடி கையாடப்பட்டதன் விசாரணை தொடர்பாக நேற்றிரவு 9 மணிக்கு அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்பு, சுமார் ஐந்து மணி நேரம் இங்குள்ள எம்.ஏ.சி.சி. அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இன்று வெள்ளிக்கிழமை காலையில் கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டு, பிறகு அவர் தடுத்து வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்.ஏ.சி.சி. துணைத் தலைமை ஆணையர் டத்தோ அஸ்மி பாக்கி இத்தகவலை உறுதி செய்துள்ளார்.

இதற்கு முன்பு, ஷாபி அப்டால் தனது வழக்கறிஞர்களுடன் நேற்று மாலை 5.15 மணிக்கு எம்.ஏ.சி.சி. அலுவலகம் வந்தடைந்தார். ஷாபியின் மனைவி டத்தின்ஸ்ரீ ஷுர்யானி ஷுவாய்ப், இவ்விசாரணை தொடர்பாக கைதான முதல் நபரான வாரிசான் கட்சியின் உதவித் தலைவர் டத்தோ பீட்டர் அந்தோணி ஆகியோர் உடனிருந்தனர்.

Read More: Malaysia Nanban News Paper on 20.10.2017 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img