நேற்று முன்தினம் இரவு தாமான் மௌண்ட் ஆஸ்டினில் கைத்துப்பாக்கியை வைத்திருந்ததற்காக ஒரு காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். இரவு 9.30 மணியளவில் 22 வயதுடைய அந்த ஜோடியை வழக்கமான சோதனையின் போது வீடமைப்புப் பகுதியில் கைது செய்ததாக ஜொகூர்பாரு தென் பகுதி மாவட்டபோலீஸ் தலைவர் உதவி கமிஷனர் சுலைமான் சாலே தெரிவித்தார். தாமான் மௌண்ட் ஆஸ்டின் ஜாலான் முத்திராயா மாஸ் 10/19இல் வழக்கமான சுற்றுக்காவல் வண் டியில் சுற்றுக்காவல் மேற்கொண்டிருந்த போது அவ்விருவரும் பிடிபட்டதாக அவர் குறிப்பிட்டார். அந்த ஜோடி சென்ற வாகனம் புக்கிட் இண் டாவில் திருடப்பட்ட வாகனம் என்பதை கண்டறிந்த போலீசார் வாகனத்தை தடுத்து சோதனை மேற்கொண்ட போது வாகனத்தின் வாகனமோட்டி அமர்ந்திருக்கும் பகுதியின் அடியில் துப்பாக்கி ரவைகள் இல்லாமல் அந்த கைத்துப் பாக்கியை போலீசார் கைப்பற் றியதாக சுலைமான் சாலே குறிப்பிட்டார். அந்த கைத்துப்பாக்கி தங்க ளுடையது அல்ல என அந்த ஜோடி மறுத்ததாக தெரிவித்த அவர் ஆடவர் வீட்டை உடைத்து திருடுதல், வாகன திருடல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக் காக தண்டனை பெற்றுள்ள தாகவும் குறிப்பிட்டார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்