சமயம் என்ற பெயரில் நடைமுறைக்கு ஒவ்வாத சில தடை செய்யப்பட்ட பழக்க வழக்கங்களை ஜொகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தார் வன்மையாகக் கண்டித்துள்ளார். இம்மாதிரியான சூழலில் ஒரு சமூகத்தில் வாழ்வது சிரமமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தூய்மை என்ற அடிப்படையில் முஸ்லிம் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்ற மறுத்த முஸ்லிம்களுக்கு மட்டுமான சலவை நிலையத்தின் நிலைப்பாடு குறித்து கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு பேசினார்.
உங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள். பொது இடங்களில் உள்ள இருக்கைகளைப் பற்றி என்ன சொல்வீர்கள்? அவற்றை நாய்கள் தீண்டியிருக்கலாம். அல்லது ஹோட்டல்களில் உள்ள தலையணைகளும், போர்வைகளும் அசுத்தமானவையாக இருக்கலாம்.
இதற்கு முடிவே கிடையாது. அனைத்திற்கும் தடை விதித்தால், ஒரு சமுதாயத்தில் வாழ்வதை விட குகையில் தனியாக வாழ்வதுதான் சிறப்பு என்பதே எனது ஆலோசனை என்று சுல்தான் இப்ராஹிம் மேலும் கூறினார். பத்து பகாட்டில் மலேசிய துன் ஹுசேன் ஓன் பல்கலைக்கழகத்தின் 17-ஆவது பட்ட மளிப்பு விழாவில் உரை நிகழ்த்தியபோது சுல்தான் அவர் இவ்வாறு பேசினார்.
Read More: Malaysia Nanban News Paper on 16.10.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்