img
img

கோம்பாக்கில் சடலம், கொலையுண்டவர் இலங்கைத் தமிழர்.
வெள்ளி 13 அக்டோபர் 2017 17:27:24

img

கோம்பாக்கில் மலைப்பகுதி ஓரத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம் யாருடையது என அடையாளம் காணப்பட்டது. கொலை செய்யப்பட்டு 15 மீட்டர் உயரத்திலிருந்து கீழே வீசப்பட்டவர் ஓர் இலங்கைத் தமிழர் எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.      இந்தக் கொலை தொடர்பில் இதுவரை இரண்டு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொலை செய்யப்பட்ட ஆடவனின் கை, கம்பியால் கட்டப்பட்டு,  தலை மற்றும் கால்கள் வெள்ளைக் கோணிப் பையில் மூடிக்கட்டப்பட்டிருந்தது என கோம்பாக் ஓசிபிடி துணைப் போலீஸ் அலி அமாட் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

மீட்கப்பட்ட சடலத்திற்குரியவர், 32 வயதான இலங்கைத் தமிழர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடம் ஐக்கிய நாடுகள் சபையின் அகதி களுக்கான உயர் ஆணையர் அட்டை இருந்தது. அவரது உடலில் குத்தப்பட்டிருந்த பச்சையினை வைத்து, அவரது மலேசிய மனைவி தனது கணவரின் உடலை அடையாளம் காட்டினார்.     இந்த நபர், வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் இங்கு கொண்டுவந்து வீசப்பட்டிருக்கலாம் என கோம்பாக் போலீஸ் அதிகாரி அலி அமாட் கூறினார்.

Read More: Malaysia Nanban News Paper on 13.10.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img