img
img

பிறப்புப்  பதிவு விவகாரத்தில் வெ.1,000 அபராதமா?
வெள்ளி 13 அக்டோபர் 2017 17:07:05

img

பிறப்பு  தொடர்பாக  குறிப்பிட்ட  காலத்திற்குள் பதிவு செய்யத் தவறினால் 1,000 வெள்ளி  அபராதம் விதிக்க உள்துறை அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கை ஏழை மக்களுக்கு பெரும் சுமையாகி விடும் என்று நேற்று அச்சம் தெரிவிக்கப்பட்டது.  அதேவேளையில் உள்துறை அமைச்சின் இந்த நடவடிக்கை  சட்டப்பூர்வமானதா என்ற கேள்வியை எதிர்க்கட்சியினர் எழுப்பியுள்ளனர்.

இந்த அளவுக்கு அதிகமான அபராதம் விதிப்பது ஏழைகளுக்கு பெரும் சுமையாக இருக்கும் என்பதோடு இந்நடவடிக்கை நாடற்ற குழந்தைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாரம் செவ்வாய்க்கிழமைக்கு  முன்னதாக 50 வெள்ளியாக இருந்த அபராதத் தொகை திடீரென்று அதிகரிக்கப்பட்டு அமலுக்கு வருகிறது. 1952 ஆம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு மற்றும் சுவீகாரச் சட்டத்திற்கான  திருத்தமானது,  அனைத்து பிறப்புகளும் 60 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்  என்பது விதியும்கூட.  இதில் முறை தவறிப் பிறந்த குழந்தைகளும் அடங்கும்.  கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தால் இந்த திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அரசாங்கம் இந்த அபராத அதிகரிப்பு முடிவைச் செய்தது என்று துணை உள்துறை அமைச்சர் கூறியதாக பெர்னாமா தெரிவிக்கிறது.

Read More: Malaysia Nanban News Paper on 13.10.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img