ஷங்ரிலா ஹோட்டல் குழுமத் தைச் சேர்ந்த கோல்டன் சென்ஸ் ரிசோர்ட் ஓய்வு விடுதி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலேசியாவிலேயே மிகப்பெரிய மிதக்கும் கோலத்தை வரைந்து மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.சுமார் 120,000 கேலன் தண்ணீர் நிறைந்த அவ்வோய்வு விடுதியின் நீச்சல் குளத்தில் இந்த் கோலம் மிதக்கின்றது. கண்களை பறிக்கும் அழகிய காட்சியாக இது வருகையாளர்கள், குறிப்பாக சுற்றுப்பயணி களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
இளஞ்சிவப்பு, நிலம், ஊதா, பச்சை, ஆரஞ்சு, மஞ்சள் நிறங் களில் அழகாக வரையப்பட்டுள்ள மயில், தாமரை இலைகளுடன், ஷங்ரிலா ஹோட்டலின் முதல் எழுத்தான ‘எஸ்’ சின்னம் கொண்ட 638.02 சதுர மீட்டர் அளவிலான இந்த கோலம் மலேசியாவில் இதுவே முதல் வகையாகும்.மொத்தம் 435 கிலோ கிராம் எடையைக் கொண்ட உலர்ந்த தேங்காய்ப்பூ (87 பைகள்), 37.9 கிலோ கிராம் எடையைக் கொண்ட ஸ்டிக்கர் பசை, 47 பல்வேறு வடிவம், அளவிலான ஸ்டாய்ரோஃபோம், 5,000 கொத்து சாமந்தி பூ வகைகள் ஆகியன இதன் உருவாக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டன.
Read More: Malysia Nanban News Paper on 11.10.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்