இரு கையூட்டு பெற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் பெண் போலீஸ் அதிகாரி நேற்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜ ரானார். குற்றம் சுமத்தப்பட்ட சார்ஜன் அபிபா சைனால் அபிடின் (வயது 28) தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நீதிபதி அமிருடின் அகமட் முன்னிலையில் மறுத்ததுடன் இந்த வழக்கின் விசாரணையை தொடரும்படியும் கேட்டுக் கொண்டார்.
சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி காலை 11.40 மணியளவில் அகமட் தெர்மிசி முகமட் ஹிசாம் என்பவரிடம் வெ.2 ஆயிரத்தை கையூட்டாக தொலைபேசியின் மூலம் கேட்டுள்ளார்.அதனை அடுத்து அதே வருடம் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி பிற்பகல் 12.10 மணியளவில் மீண்டும் அதே தொகையை கேட்டு மீண்டும் சம்பந்தப்பட்ட நபரை மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Read More: Malaysia Nanban News Paper on 10.10.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்