தகுதித் திறன் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் உயர் கல்விக் கழகங்களில் நுழைய முடியும் என்ற கட்டாய நிபந்தனையை அரசாங்கம் விதித்தி ருந்தால் அதிகமான மலேசிய இந்தியர்கள் உயர் கல்வியை மேற்கொள்ளும் வாய்ப்பை பெற்றிருக்க மாட்டார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சுட்டிக்காட் டியுள்ளார். மலேசிய இந்தியர்களுக்காக உயர் கல்விக் கழகங்களில் கூடுதலாக 700 இடங்களையும், மலேசிய வரலாற்றில் முதல் முறையாக மொட்ரிக்குலேஷன் பயிற்சிகளுக்காக 1,500 இடங்களையும் தனது நிர்வாகம் ஒதுக்கீடு செய்ததாக அவர் கூறினார்.
உயர் கல்வியில் இந்தியர்களின் ஈடுபாடு மிகவும் குறைவாக இருப்பதை நான் உணர்ந்தேன். அதனால்தான் அண்மையில் இந்தியர்களுக்கென கூடுதலாக 700 இடங்களை நான் வழங்கினேன். காரணம், வெறும் தகுதித் திறன் அடிப்படையிலேயே நாங்கள் இதை செய்திருந்தால் இழப்பு இந்திய சமூ கத்திற்குத்தான் என்று அவர் கருத்துரைத்தார்.
Read More: Malaysia Nanban News Paper on 9.10.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்