img
img

தம்பியை வெட்டிக் கொன்றுவிட்டு நாடகமாடிய நாகேஸ்வரனுக்கு தூக்கு.
சனி 07 அக்டோபர் 2017 12:38:18

img

தன் தம்பியை வெட்டிக்கொன்றப்பின்னர் அவரின் மனைவியையும் காயப்படுத்திவிட்டு யாரோ கொலை செய்து விட்டதாக நாடகமாடிய கோத்தா ராஜாவை சேர்ந்த எம். நாகேஷ்வரன் (வயது 41) என்ற இளைஞருக்கு நேற்று இங்குள்ள உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.

சொத்துத் தகராறினால் பேராசைக்கொண்ட அந்த நபர், உடன் பிறந்த தம்பி என்றுகூட பாராமல் ஈவுயிரக்கமின்றி கொன்றதாக சாட்சியங்கள் வழி தெரியவந்ததன் மூலம்  நாகேஸ்வரனுக்கு குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் ஒரே தண்டனைதான் உண்டு. அதுதான் தூக்குத் தண்டனை என்று உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ சுல்கிப்லி பாக்கார்  தீர்ப்பளித்தார்.

கடந்த 2015 மே 5 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு ஷா ஆலம், செக்ஷன் 36, ஜாலான் கம்போங் ஜாவா வீடமைப்புப்பகுதியில்  எம். குணாளன் (வயது 37) என்பவரை வெட்டிக் கொன்றதுடன் அவரின் மனைவி வி. மல்லிகாவிற்கு காயம் விளைவித்ததாக குளிர்சாதனப் பெட்டிகளை பழுதுபார்ப்பவரான  நாகேஷ்வரன் குற்றஞ்சாட்டப்பட்டார். 35 வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட தன் தம்பி குணாளனை யாரோ வெட்டிக்கொன்று விட்டதாக தொடக்கத்தில் நாகேஸ்வரன் நாடகமாடியுள்ளார். 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img