img
img

சிரம்பான் பெரிய மார்க்கெட் தீ. மஇகா கண்டு கொள்ளாதது ஏன்?
வெள்ளி 06 அக்டோபர் 2017 17:16:31

img

சிரம்பான் பெரிய மார்க்கெட் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இந்திய வியாபாரிகளுக்கு நெகிரி மாநில மஇகா தொடர்புக்குழு ஒரு சல்லிக் காசுகூட கொடுத்து உதவ  முன் வராதது மிகவும் வேதனைக்குரியது என்று தெரிவிக்கப்பட்டது.கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி  இரவு 7.30 மணியளவில் சிரம்பான் பெரிய மார்க்கெட்டின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 இந்திய வர்த்தகர்கள் உட்பட 300 பேரின் கடைகள் தீக்கிரையாகின. 

இந்தத் தீ விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவுவதற்காக அதிரடியாக  மாநில ஜசெக இரு வாரங்களில் வெ.3 லட்சம்  நிதி திரட்டி ஒரு வர்த்தகருக்கு தலா 1,000 வெள்ளியை வழங்கியது. அதன் பிறகு மாநில மசீச கட்சி ஜசெகவுக்கு போட்டியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 1,000 வெள்ளியை வழங்கியது.

ஆனால் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இந்திய வர்த்தகர்களுக்கு நிதி உதவி செய்வதற்கு மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ எல்.மாணிக்கம் இன்னும் மன இறுக்கமுடன் இருப்பது ஒரு புறம் இருந்தாலும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சுப்பிரமணியத்திடம் தகவல் கொடுத்தும் எந்தவித பயனும் ஏற்படவில்லை.

Read More: Malaysia Nanban News Paper on 6.10.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img