img
img

வீடுகள் உடைப்பு: வெகுண்டு எழுந்த பொதுமக்கள் 9 பேர் கைது
வியாழன் 05 அக்டோபர் 2017 16:34:37

img

சுபாங் விமான நிலையத்திற்கு செல்லும் பாதையை ஒட்டிய மூன்று கடைகளும் இரண்டு வீடுகளும் உடைத்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவத்தில் ஒரே பதற்றமும் பரபரப்பும் நிலவியது. வீடுகள் உடைப்பை எதிர்த்து பொங்கி எழுந்து, அதனை தடுக்க முற்பட்ட பொது மக்களில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வீடு உடைப்பினால் 17 பேர் உறைவிடம் இல்லாமல் விரட்டி அடிக்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியது. போலீசாரின் உதவியுடன் சிலாங்கூர் நில இலாகா அதிகாரிகள் நேற்று காலையில் இந்த வீடு உடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்த வீடுகளும் கடைகளும் இருக்கும் இடம் அரசாங்கத்திற்கு  சொந்தமான நிலம் என்று கூறிக்கொண்ட சிலாங்கூர் நில இலாகா, ஷா ஆலம் மாநகர் மன்றம், தெனாகா நேஷனல், ஷபாஸ் மற்றும் காவல் துறையினர்   நீதிமன்றத்தின் உத்தரவினை பெற்ற  பின்னரே குடியிருப்புக்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறினர். வீடுகள் உடைக்கப்படுவதை தடுத்து நிறுத்த முற்பட்ட  மக்களில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் அ.சிவராஜன், இளைஞர் பகுதித் தலைவர் சுவீட் இஸ்மாத் ஆகியோரும் அடங்குவர். ஒன்பது பேரை விசாரிக்கும் வண்ணம் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

Read More: Malaysia Nanban News paper on 5.10.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img