சாலை விபத்தில் சிக்கியவரைத் தேடி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் வேறு இடத்தில் மற்றொரு கேஸ் இருப்பதாக சாக்கு போக்குக் கூறி அலட்சியமாக ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் அங்கிருந்து சென்றிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று சமூக ஆர்வலர்களான பி.எஸ்.கிருஷ்ணன், ஹிண்ட்ராப் போராட்ட வாதி மூர்த்தி பெரியப்பா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
நேற்று முன் தினம் நண்பகல் 12.00 மணியளவில் இந்திய இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது விபத்தில் சிக்கினார். உடனடியாக போலீசுக்கும் ஊத்தான் மெலிந்தாங் கிளினிக் கெசிஹாத்தானுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் வாகனமும் மருத்துவ உதவியாளரும் ஆறு ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுங்கை சுமுன் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் நோயாளி ஒருவர் உள்ளார் அவரை ஏற்றிக் கொண்டு தெலுக் இந்தான் மாவட்ட மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து பறந்து விட்டார்.
Read More: MALAYSIA NANBAN NEWS PAPER on 27.9.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்