img
img

 கெட்கோ நில விவகாரம்: இருவர் கைது
செவ்வாய் 26 செப்டம்பர் 2017 12:43:42

img

பகாவ், கெட்கோ நிலத்தை ஏலத்தில் எடுத்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்து இருப்பதாக மக்கள் செய்த புகாரை தொடர்ந்து பிரபல நிறுவனத்தைச் சேர்ந்த டத்தோ அந்தஸ்தை கொண்ட இரு இந்திய சகோதரர்களை  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) நேற்று  அதிரடியாக கைது செய்துள்ளது. 54, 58 வயதுடைய அவர்கள்,  தொடர்ந்து காவலில் தடுத்து வைக்கப்படுவதற்கான ஆணையை பெறுவதற்கு இன்று காலையில் புத்ரா ஜெயாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவர்.

பெட்டாலிங் ஜெயாவில் பிரபல நிறுவனத்தை நடத்திவரும் அந்த இரு சகோதரர்களை எம்.ஏ.சி.சி. அதிகாரிகள் கைது செய்து இருப்பதை அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஸூல்கிப்ளி அமாட் நேற்று உறுதிபடுத்தினார். இந்த கெட்கோ நில விவகார ஊழல் தொடர்பாக எம்.ஏ.சி.சி. மேற்கொண்டு வரும் விசாரணையில் மேலும் பலர்  கைது செய்யப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் சொன்னார்.

அந்த இரு இந்திய சகோதரர்களும்  சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் முறையே  தலைமை இயக்குநர் மற்றும் தலைமை செயல்முறை அதிகாரியாக பொறுப்பில் உள்ளனர். நேற்று காலையில் விசாரணைக்காக புத்ராஜெயாவில் உள்ள எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் அழைக்கப்பட்ட அவர்கள், பின்னர் கைது செய்யப்பட்டு லாக்காப்பில் அடைக்கப்பட்டுள்ளனர்.

READ MORE: MALAYSIA NANBAN NEWS PAPER on 26.9.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img