(எஸ்.எஸ்.பரதன்) உலுசிலாங்கூர், உலுசிலாங்கூர் மாவட்ட காவல்துறை தலைவராக கடந்த 3 ஆண்டு காலம் சிறப்புடன் பணியாற்றி வந்த ஏசிபி ரா.சுப்பிரமணியம், சிலாங்கூர் மாநில காவல்துறை இலாகாவில் குற்றவியல் விசாரணைப் பிரிவின் (சிஐடி) துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, மாநில காவல்துறை நிர் வாகப் பிரிவு தலைவர் எஸ்ஏசி சுலைமான் சாலே தெரிவித்தார். நேற்று காலை மணி 11.00 அளவில், கோலகுபுபாருவிலுள்ள மாவட்ட காவல்துறை இலாகா வளாகத்தில் நடை பெற்ற பணி ஒப்படைப்பு நிகழ்வில் உரை யாற்றியபோது இவ்வாறு கூறினார். 12 காவல் நிலையங்களைக் கொண்ட உலுசிலாங்கூர் மாவட்ட மக்களின் அமைதிக்கும் சுபிட்சத்திற்கும் ஏசிபி சுப்பிரம ணியம் அரும் பணியாற்றியுள்ளதாக அவர் புகழாரம் சூட்டினார். அவரின் சேவை மாநில அளவில் குற்றவியல் சம்பவங்களைக் குறைக்க பேருதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்