கோலாலம்பூர், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நவீன மலேசியாவின் தந்தை என்று பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அடைமொழி தொடர்ந்து நிலை நிறுத்தப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆவணங்கள் மற்றும் துல்லிய குறிப்பு விவரங்களை அடிப்படையாகக் கொண்டே கல்வி அமைச்சின் பாடப் புத்தகங்கள் எழுதப்படுவதால் துன் மகாதீரின் அந்த அடைமொழி தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மகாட்ஸிர் காலிட் தெரிவித்தார். மலேசியாவை நவீனமயமாக்கியவர் துன் மகாதீர். அவருக்கு வழங்கப்பட்ட நவீன மலேசியாவின் தந்தை என்ற அந்தஸ்து தொடர்ந்து பள்ளிப் பாடப் புத்தகங்களில் அங்கீகரிக்கப்படுமா என்று சிகாம்புட் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கேள்விக்கு பதில் அளிக்கையில் மகாட்ஸிர் மேற்கண்ட வாறு குறிப்பிட்டார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்