கோலாலம்பூர், நாடு முழுவதும் உள்ள 176 பள்ளிகளில் மாணவர் பற்றாக்குறை நிலவுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கை 20க்கும் குறைவாக இருக்கிறது. இந்த பள்ளிகள் மூடப்படலாம் அல்லது இதர பள்ளிகளுடன் இணைக் கப்படலாம் என்று கல்வித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்ஸிர் காலிட் கோடி காட்டினார். ஒரு பள்ளியில் மாணவர் எண்ணிக்கை 150க்கும் குறைவாக இருந்தால் அந்தப் பள்ளி குறைவான மாணவர் எண்ணிக்கை என்று கல்வியமைச்சு கருது கிறது. பள்ளி மாணவர் எண்ணிக்கை பிரச்சினை குறித்து செபூத்தே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அகமது லாய் பூஜாங் கேள்வி எழுப்பினார். இதற்கு கல்வியமைச்சர் விளக்கம் தந்தார். 2,986 பள்ளிகள் 150க்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ளது. இதில் 2,058 தேசியப் பள்ளிகள். 578 சீன ஆரம்பப் பள்ளிகள். 360 தமிழ்ப்பள்ளிகள் என்று கல்வியமைச்சர் மாட்ஸிர் காலிட் சுட்டிக் காட்டினார். 44 பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 10க்கும் குறைவாக உள்ளது. 132 பள்ளிகளில் மாண வர் எண்ணிக்கை 20க்கும் குறைவாக உள்ளது. ஒரு பள்ளியினை மூடுவதோ அல்லது மற்றொரு பள்ளியுடன் இணையும்போது அமைச்சு ஒரு போதும் கட்டாயப்படுத்தாது. இது பெற்றோர்களின் ஒப்புதலை பொறுத்த விஷயம்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்