மலாக்கா பாலர் பள்ளி மாணவியை கற்பழித்ததாக ஏழு வயது பையனுக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது. இரண்டு சிறுவர்கள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கை போலீசார் மிகவும் கவனமுடனும் சாதூரியமாகவும் கையாள வேண்டும் என்று மலாக்கா சிஐடி மூத்த தலைமைத் துணை ஆணையர் கமாலு டின் காசிம் அறிவுறுத்தியுள்ளார். போலீசார், பொம்மைகளை முன்மாதிரியாக பயன்படுத்தி நடந்த சம்பவத்தைப் பாதிக்கப் பட்ட அந்தச் சிறுமி மற்றும் அந்த பையனிடம் விசாரணை செய்தனர். ஜுலை 20ஆம் தேதி அந்த சிறுமியின் தாயார் இந்தப் புகாரை செய்ததாகவும் இந்த விசாரணை 90 விழுக்காடு பூர்த்தி அடைந்து விட்டதாகவும் ஏசிபி காமாலுடின் நேற்று கூறினார். கடந்த ஜூலை 19ஆம் தேதி யன்று வழக்கம் போல் வேலை முடித்து விட்டுக்கு திரும்பிய அச்சிறுமியின் தாயார், குழந்தையை பராமரித்து வந்தவரின் வீட்டிலிருந்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் அந்தச் சிறுமி வலியால் துடித்துள்ளார். பதற்றம் அடைந்த தாயார் தன் னுடைய மகளை விசாரித்ததுடன் பரிசோதித்து பார்த்ததில், அச்சிறுமியின் பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். என்ன நடந்தது என்று விசாரித்த போது பராமரிப்பு இல்லத்தில் இருக்கும் ஏழு வயது பையன்தான் அதற்கு காரணம் என்று அந்தச் சிறுமி கூறியுள்ளார். இது குறித்து அந்தச் சிறுமியின் தாயார் போலீசில் புகார் செய்துள்ளார். 2017-ஆம் ஆண்டின் குழந்தை பாலியல் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த விவகாரம் விசாரணை செய்யப்படு வருகிறது. அச்சிறுமி மலாக்கா பொது மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் பொதுவாக நடந்தாலும் சிறிய வயதில் இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதற்கு சுற்றுச்சூழலும் பெற்றோர்களின் வளர்ப்பும்தான் காரணம் என்று மருத்துவர்கள் சுட்டிக் காட்டினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்