img
img

பிரபாகரனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்.
வெள்ளி 14 ஜூலை 2017 12:34:19

img

சிங்கப்பூர், ஒரு மலேசியப் பிரஜையான பிரபாகரனின் தூக்குத் தண்டனையை ஒத்திவைக்கக் கோரி, அவரின் குடும்பத்தினரும் மனித உரிமை அமைப்புகளும் முழு வீச்சாக நடத்திய கடைசி நேர சட்டப் போராட்டம் தோல்வியில் முடிந்தது. அவருக்கு தூக்குத்தண்டனை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் 6 மணிக்கு சாங்கி சிறைச்சாலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. நாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கும் நம்பிக்கைக்கும் இதுவே கடைசி வழியாக இருந்தது என்று சிங்கப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய வழக்கறிஞர் சுரேந்திரன் தெரிவித்தார். பிரபாகரன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிங்கப்பூர் நீதிமன்றம் பிறப்பித்த தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை எதிர்த்து அந்த வழக்கை நெதர்லாந்தில் தி ஹெக் நகரில் உள்ள அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல அவரின் குடும்பத்தினர் கடந்த ஓராண்டு காலமாக போராடி வந்தனர். தனது 17 வயதில் தந்தையை இழந்த பிரபாகரன், தாயார் ஈஸ்வரியின் பராமரிப் பில்தான் ஜொகூரில் வாழ்ந்து வந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு இவருக்கு எதிராக சிங்கப்பூர் போலீசார் கொண்டு வந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடைசி வரையில் தாம் ஒரு நிர பராதி என்றும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள முக்கிய நபர்கள் சாட்சியாக அழைக்கப்படவில்லை என்றும் 30 வயதான பிரபாகரன் வாதிட்டு வந்தார். இதன் காரணமாகவே சிங்கப்பூர் நீதிமன்றம் பிறப்பித்த தூக்குத் தண்டனையை எதிர்த்து இவ்வழக்கை அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டு செல் வதென அவரின் தாயார் ஈஸ்வரி சட்டப் போராட்டம் நடத்தி வந்தார். இவ்வழக்கை அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுவதற்கு அனுமதி கோரி பிரபாகரனின் தாயார் ஈஸ்வரி செய்து கொண்ட மேல்முறையீட்டு வழக்கு மனு இன்னமும் மலேசிய நீதிமன்றத்தில் இருக்கும் போது விசா ரணை முடிவு தெரியும் வரையில் தன் மகனின் தூக்குத்தண்டனை ஒத்திவைக்க கோரி கடைசி நிமிடம் வரையில் ஈஸ்வரி போராடி வந்தார் என்பது குறிப் பிடத்தக்கது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img