img
img

தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்
வெள்ளி 07 ஜூலை 2017 13:48:45

img

(துர்க்கா) ஜெம்பூல், பணம் கேட்டு கொடுக்காத தந்தையை பாராங் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து தலைமறைவான மகன் கைதாகி காவலில் 7 தினங்களுக்கு தடுத்து வைக்க நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டது. நேற்று முன்தினம் காலை 9.00 மணியளவில் பகாவ் மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில் தந்தையை கொலை செய்த (48 வயது) மகன் காவலில் தடுத்து வைக்க நீதிபதி முகமட் ரேட்ஜா அஜார் ரெஜாலி உத்தரவிட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் பெல்டா லூய் தீமோர் நிலக்குடி யேற்றவாசி எஸ்.வேலாயுதம் (73 வயது), என்பவர் வீட்டில் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே மரண மடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. பணம் கொடுக்காத காரணத்தினால் தந்தையை இரக்கமின்றி பாராங் கத்தியால் வெட்டிக் கொலை செய்ததாக குற்றவியல் 302இன் கீழ் கைது செய்யப் பட்டு காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மகன் தீவிர புலன் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என்று கூறப்பட்டது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img