கோல திரெங்கானு ஏறக்குறைய வெ.22,000 மதிப்புடைய 2,200 போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த 18 வயதுமிக்க இளைஞர் கைது செய்யப்பட்டார். கைது செய் யப்பட்ட இளைஞரைக் கடந்த 2 மாதங்களாக உளவு பார்க்கப்பட்டதன் பின் கோல திரெங்கானு காவல்துறையின் தலைமையகத்தின் போதைப்பொருள் விசாரணைப் பிரிவு இங்குள்ள கம்போங் பாதினில் உள்ள வீட்டில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டதாக கோல திரெங்கானு காவல் துறையின் துணைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் சுபியான் சுலைமான் தெரிவித்தார். சோதனை நடவடிக்கையின்போது அந்த இளைஞர் உறங்கிக் கொண்டிருந்ததோடு போதைப்பொருள் மாத்திரைகள் அடங்கிய பிளாஸ்டிக் பை கட்டிலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்தது. இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொள்ள வில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் மீது இதுவரையில் எவ்வித குற்றப் பதிவும் இல்லை என்ற காரணத்தாலும் அவர் வெறும் விநியோகிப்பாளராக மட்டும் இருக்கலாம் என நம்பப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, அந்த இளைஞரின் தலைவரை அடை யாளம் கண்டுவிட்டதாகவும் தற்போது அவரை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்