பி.ஏ.கந்தையா தெலுக் இந்தான், வாட்சாப் இணைய வலைத் தளங்கள் மருத்துவம் சாராதவர்களால் கூறப்படும் மருந்துகள் மருத்துவ ஆலோசனைகளைப் பொது மக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக் கொண்டது. தற்போது வாட்சாப், இணைய வலைத்தளங்களில் மருத்துவ சம்பந்தமே இல்லாதவர்கள் ஆளாளுக்கு நாட்டு மருந்து அல்லோபதி (ஆங்கில) மருத்துவம் குறித்து ஆலோசனை கூறி வருகின்றனர். ஒரு சில ஆலோசனைகள் உண்மையாகவும் இருக்கலாம். ஏற்கக் கூடியதாகவும் இருக்கலாம். ஒரு சில நேரங்களில் ஒரு சிலருக்கு ஒவ்வொரு மருந்தாகவும் இருக்கலாம் எல்லாருக்கும் எல்லா மருந்துகளும் பொருந்தி விடாது. தங்களுக்கு ஏற்படும் உபாதைகள் நோய்களுக்கு மருத்துவர்களின் வழி காட்டுதல், ஆலோசனைப் படிதான் மருந்து சாப்பிட வேண்டும் என்று பி.ப.சங்கத் தின் கல்விப் பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.ஒருவருக்கு ஏற்படும் நோய் உபாதைகளுக்கு மருத்துவர்களின் ஆலோசனை வழி காட்டுத லின்றி மருந்து சாப்பிட்டால் அது விபரீதத்தில் தான் முடியும் என்றும் சுப்பாராவ் கூறினார். பொது மக்கள் நோய் உபாதைகள், அதற்கான மருந்துகள் குறித்து அனைத்து நிலையிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்