கிள்ளான், அந்நிய தொழிலாளர்களின் தற்காலிக பதிவு அட்டை (ஈ-கார்ட்) காலவதியான பின்னும் நாட்டிற்குள் தங்கி வந்தவர்களை அதிகாரிகள் கைது செய் துள்ளனர். காப்பார் சுற்று வட்டாரத்திலுள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் அந்நிய தொழிலாளர்கள் தங்கியிருந்த இரு தங்கும் விடுதியை அதி காரிகள் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் சோதனையிட்டனர். அங்கிருந்த 239 பேர் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் முறையான ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் 51 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 38 வங்காளதேச பிரஜைகள், 5 நேப்பாள் பிரஜைகள், இந்தோனேசிய பிரஜைகள் நால்வர், மியன்மார் பிரஜைகள் ஐவர் ஆகியோர் அடங்குவர்.கைது செய்த வர்கள் அனைவரும் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தபார் அலி தெரி வித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்