பெட்டாலிங் ஜெயா, ‘பேஸ்புக் பில்’ என்ற ஒரு வகை போதை மாத்திரையை உட்கொண்டு மாது மூளைச் சாவு அடைந்த சம்பவத்தைப் தொடர்ந்து அதைப் பற்றிய விசாரணை துரிதப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அச்சம்பவத்தைப் பற்றி இதுவரை எவ்வித புகாரும் கிடைக்கவில்லை. எனினும் இதன் தொடர்பில் சுகாதார அமைச்சு அதன் விசாரணையை மேற் கொள் ளும் என சுகாதாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார். இந்நிலையில் சுகாதார அமைச்சால் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு மருந்தினையும் உட்கொள்ள வேண்டாம் என பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட் டுள்ளது. சந்தையில் கிடைக்கும் மாத்திரைகளையும் மருந்துகளையும் உட்கொள்வது ஒருவரின் சுய விருப்பத்தைச் சார்ந்த செயலாக இருந்தாலும், தேசிய மருந்தியல் கட்டுப்பாடு பிரிவின் அங்கீகாரம் பெற்றுள்ளதா? என்பதனை உறுதி செய்து உட்கொள்வது அவசியம் எனவும் டத்தோ சுப்பிரமணியம் கூறினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்