எம்.கே.வள்ளுவன் பாசீர்கூடாங், நேற்று பிற்பகல் ஜொகூர் துறைமுகத்திலிருந்து ஸ்கூடாயை நோக்கி சிமெண்டுகளை 31 வண்டிகளில் ஏற்றிச் சென்ற ரயில் வண்டி தடத்தைக் கடந்து பாசீர் கூடாங் நெடுஞ்சாலையின் 29ஆவது கிலோ மீட்டரில் வழி மறித்து நின்றது.அந்த சம்பவத்தால் ரயில் வண்டி சாலையை மறைத்து பெரும் போக்கு வரத்து நெரிசலை ஏற்படுத்திய போதிலும் யாருக்கும் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. அச்சம்பவம் குறித்து கருத் துரைத்த கே.டி.எம்.பி.நிறுவன தொடர்புப் பிரிவு அதிகாரி ஒருவர் கிரேன் வண்டியை கொண்டு சாலையிலிருந்து ரயில் வண்டியை அகற்ற சுமார் இரண்டு மணி நேரம் பிடித்ததாக தெரிவித்தார்.அச்சம்பவத்தால் கெராத்தாப்பி தானா மெலாயு நிறுவனம் வருத்தமடைவதாக தெரிவித்த அவர் போக்குவரத்து போலீஸ் துணையுடன் சாலையில் ஏற்பட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்