குவா மூசாங், மூன்று வாகனங்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் இளைஞர் பலியான வேளையில், ஐவர் பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் குவா மூசாங்கிலிருந்து கோல கிராயிக்கு செல்லும் சாலையின் 42ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்துள்ளது. கோல கிராயிலிருந்து குவா மூசாங்கை நோக்கி பயணித்த புரோட்டோன் வீரா ரகக் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் சாலைக்கு சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக குவா மூசாங் மாவட்ட போலீஸ் படைத் தலைவர் ரஜாப் அஹாட் இஸ்மாயில் தெரிவித்தார்.புரோட்டோன் வீரா ரகக் கார் எதிர் சாலை யில் வந்த புரோட்டோன் ஈஸ்வரா, ஹோண்டா சிட்டி ஆகிய கார்களை மோதியுள்ளது. இதனால் புரோட்டோன் வீரா காரின் முன் இருக்கையில் அமர்ந் திருந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். பலத்த காயங்களுக்கு ஆளானவர்கள் சிக்கு அரசு கிளினிக்கில் முதலுதவி பெற்ற பின்னர் குவா மூசாங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டதாக அவர் சொன்னார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்