சிப்பாங், கிள்ளான் பள்ளத்தாக்கின் எம்ஆர்டி திட்டத்தின் இரண் டாவது கட்ட பணியானது 99 விழுக்காடு பூர்த்தியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செமாத் தானுக்கும் காஜாங் கிற்குமான இரயில்வே சேவையானது இறுதிக்கட்ட பரிசோதனையில் இருக்கிறது என்று பிரசரனா மலேசிய பெர் ஹாட் நிறு வனத்தின் தலைவரும் தலைமை செயல்முறை அதிகாரி யுமான டத்தோ அஸ்மி அப்துல் அஸிஸ் தெரிவித்தார். ஜூலை 17இல் முழு சேவை துவங்கும். தற்சமயம் இறுதிக் கட்ட பயண பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. சேவை தொடங்கிய பிறகு இரயில் பயணம் சீராக சிறப்பாக நிகழ்வதை இத்த கைய நடவடிக்கை உறுதிப்படுத்தும். நேற்று கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் டத்தோ அஸ்மி அப்துல் அஸிஸ் பேசும் போது மேற்கண்ட விவரங்களை தெரிவித்தார்.எம்ஆர்டி ஒன்று முதல் கட்ட செயல்பாடு கடந்தாண்டு டிசம்பர் 16ஆம் தேதி யன்று ஆரம்பமாகியது. இரண்டாவது கட்டப் பணி ஜூலை 17இல் துவக்கப் படும். நாள்தோறும் இந்த சேவைத் திட்டத்தால் ஐந்து லட்சம் பயணிகள் பயன்பெறுவர் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்