கோலாலம்பூர், 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1 எம்டிபி) மீதான குறை கூறல் தொடர்பில் நடவடிக்கை ஏதும் இல்லாத நிலையில் அந்த அரசு முதலீட்டு நிறுவனம் தொடர்பான விவகாரங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் பக்காத்தான் ஹராப்பான் நாடளாவிய சூறாவளிப் பயணத்தை ஜூலை 6இல் தொடக்க உள்ளதாக டத்தோஸ்ரீ டாக் டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறியுள்ளார். 1 எம்டிபியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கப்பட்டதாகக் கூறப்படும் வெ.54 கோடி அமெரிக்க டாலர் (வெ.230 கோடி) பெறுமான சொத்துக்களை பறிமுதல் செய்ய அமெரிக்க நீதித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதையடுத்து இந்த இரு மாத கால பிரச்சார சுற்றுப் பயணத் திற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. உத்தேச பிரச்சார சுற்றுப் பயணம் எல்லா மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படும். அப்பிரச்சார சுற்றுப் பயணம் 6.7.2017 இரவு 9 மணிக்கு கப்பளா பத்தாஸ், டேவான் ஜே கேகேகே பெனாகாவில் தொடங்கும். செப்டம்பரில் மக்கள் அமைதிப் பேரணி ஒன்றுடன் நிறைவு பெறும் என எதிர்க்கட்சித் தலை வரான வான் அஸிஸா நேற்று நாடாளுமன்றத்தில் தமது அலுவலகத்தில் கூறியுள்ளார். இப்பேரணி தொடர்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பாஸ் கட்சி தவிர இதர எல்லா எதிர்க்கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பிரதமர் நாடாளுமன்றத்தைக் கூட்டி 1 எம்டிபி தொடர்பில் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனும் எங்களின் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம்.1 எம்டிபி தொடர்பில் புலனாய்வை வலியுறுத்தி அமலாக்க அமைப்புகளிடம் புகார் செய்வோம் என்றும் வான் அஸிஸா கூறியுள்ளார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்