அ.நாகேஸ்வரராவ் தைப்பிங், இங்கு நிகழ்ந்த கோர சாலை விபத்தில் இரு இந்திய இளைஞர்கள் பலியாகினர். எஸ்.யுகேந்திரன் (வயது 27), எம்.காளிதாஸ் (வயது 25) ஆகிய இரு வரும் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டனர். இரு கார்கள் எதிரும் புதிருமாக மோதிக் கொண்ட இவ்விபத்து நேற்று அதிகாலை 5.37 மணியளவில் கமுண்டிங் பழைய சாலையில் ராணுவ முகா மிற்கு எதிரே நிகழ்ந்தது. இவர்களுடன் ஒரே காரில் பயணம் செய்த சிவநேசன் (வயது 26) தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் தைப்பிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூவரும் பயணம் செய்த புரோட்டோன் சாகா காரை எதிரே வந்த ஆவ்டி கார் மோதியதாக கூறப்படுகிறது. இதில் ஆவ்டி காரில் பயணித்த 47 வயது ஹஸ்ராட் நூர் ஹஸ்னி சொற்ப காயங்களுடன் உயிர் தப்பினார் என்று தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹரித் காம் அப்துல்லா தெரிவித்தார். உயிரிழந்த யுகேந்திரன், கமுண்டிங் கம்போங் பினாங்கைச் சேர்ந்தவர். காளிதாஸ், ஜாலான் சிம்பாங், பத்து 2 1/2 கம்போங் சுகையிடினைச் சேர்ந்தவர். உயிரிழந்த இருவரும் விபத்தின் போது காரிலிருந்து தூக்கியெறியப்பட்டதாக கூறப்படுகிறது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்