கோலாலம்பூர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வசதி குறைந்த நோயாளிகளுக்கு மலேசிய வசதி குறைந்தோர் நோயாளிகளுக்கு உதவும் சங்கத்தின் ஆதரவில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தலைநகர் அம்பாங் ஓராங் அஸ்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டி ருக்கும் நோயாளிகளுக்கு அச்சங் கம் சக்கர நாற்காலி வழங்கியது. டாக்டர் லோகேஸ்வரி முயற்சி யில் மேற்கொள்ளப்பட்ட சமூக நல திட்டத்தின் வழி வசதி குறைந்த நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இதன் வழி டத்தோஸ்ரீ டாக்டர் ஃபைசாலியா தலைமையில் 5 நோயாளிகளுக்கு சக்கர நாற் காலிகள் வழங்கப்பட்டன. இதற்கிடையே இச்சங்கம் தொடங்கப்பட்டது முதல் நோய்களால் பாதிக் கப்பட்டு வசதி குறைவால் எந்தவொரு சிகிச்சையும் செய்ய முடியாமல் தவிக்கும் மக்களுக்கு பல வகையில் உதவிகளை செய்து வருவதாகவும் டாக்டர் லோகேஸ்வரி தெரிவித்தார். விபத்துகளில் கை, கால்களை இழந்தவர்கள் செயற்கை கை, கால்கள், காது கேளாதவர்களுக்கு காது கேட்க உதவும் உப கரணங்கள், சாயும் தன்மை கொண்ட மெத்தை, சளி போன்றவற்றை உறிஞ்சும் குழாய், ஆஸ்துமா பிரச்சினை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு ஆக்சிஜன் கான்சென்ட்ரெட்டர் உட்பட பல பொருட்களை சங்கம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்