img
img

மிரட்டி பணம் பறித்ததாக 8 போலீசார் மீது விசாரணை
சனி 24 ஜூன் 2017 12:57:32

img

கோலாலம்பூர், மிரட்டி பணம் பறித்ததாக சந்தேகிக்கப்படும் எட்டு போலீஸ் வீரர்கள் மீது போலீசார் முழுமையான புலன் விசாரணை மேற்கொள்வர். புக்கிட் அமானின் உயர்நெறி பொது நன் னடத்தை துறை இந்த விவகாரத்தை தற்போது புலன் விசாரணை செய்து வருவதாக தேசிய போலீஸ் படையின் துணைத் தலை வர் டான்ஸ்ரீ நூர் ரஷிட் இப்ராஹிம் கூறினார். அம்பாங் ஜெயா போலீஸ் மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்து போலீஸ் வீரர்களுக்கு சொந்தமான ஒரு மேசையின் அடியில் சுமார் 18,000 வெள்ளி இருக்க கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அறையில் இருந்த எட்டு போலீஸ் வீரர்கள் புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால், இதில் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றார் அவர். வெளிநாட்டினரை மிரட்டி பறிக்கப்பட்ட பணம் இது என நாங்கள் நம்புகிறோம் என்று நூர் ரஷிட் கூறினார். புக்கிட் அமானில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பதவி ஒப்படைப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் இதை கூறினார். சந்தேகப் பேர்வழிகள் புலன் விசாரணைக்கு உட்படு த்தப்பட் டிருந்தபோதிலும், அவர் கள் தங்களுடைய பணியில் மீண் டும் ஈடுபட அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். தவறுகள் நடந்திருப்பதாக புலன் விசாரணையில் தெரிய வந்தால் நாங்கள் தக்க நடவடிக்கை எடுப்போம் என்று நூர் ரஷிட் குறிப்பிட்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img