மலாக்கா, வேகக் கட்டுப்பாட்டை இழந்த மைவி கார் சாலை தடுப்புகளில் மோதியதில் 4 இராணுவ வீரர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். நேற்று காலை 9.45 மணியளவில் மலாக்கா அலோர் காஜா நெடுஞ்சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. விபத்துக்குள்ளான நான்கு ஆடவர்களும் 20 வயதுக்குட் பட்டவர்கள் என்றும் சுங்கை ஊடாங்கிலுள்ள இராணுவ பயிற்சி முகாமின் மாணவர்கள் என்றும் கண்டறியப்பட்டது. மேலும் பெருநாளுக்காக வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. சம்பவம் நிகழ்ந்த இடத்தை சுமார் காலை 10.10 மணியளவில் சென்றடைந்த போது விபத்துக்குள்ளான மைவி காரில் 4 ஆடவர்கள் சிக்கிக் கொண் டிருந்ததாக ஜாலான் குபு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு நடவடிக்கை பிரிவின் கமாண்டர் கைருடின் அட்னான் தெரிவித்தார். சுயநினைவின்றி இருந்த ஓட்டுநருக்கும் மற்ற மூவரும் கடுமையான காயங்களுக்குள்ளாகினர். காரில் சிக்கியிருந்த ஆடவர்கள் மீட்டெடுக்கப்பட்டு மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்