கங்கார், நாட்டை சிறப்பான முறையில் நிர்வகிக்கும் தலைவர்களை மட்டும் மக்கள் தேர்வு செய்ய வேண்டுமே தவிர, தம்மை பிரதமர் வேட்பாளராக பரிந்துரை செய்து வரும் சுயநல விரும்பிகளை அல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வலியுறுத்தியுள்ளார்.அம்னோவும், தேசிய முன்னணியும் மக்கள் நலனில் அதிக அக்கறைச் செலுத்திவருகிறது. ஆனால், எதிர்க்கட்சியினரோ மக்கள் நலனைப் பொருட்படுத்தாமல் மற்ற விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். தேர்தல் மூலமாக மட்டுமே ஒரு பிரதமரை தேர்வு செய்ய முடியும். மற்ற எந்த வழிகளிலும் அதற்கு வாய்ப்பே இல்லை, உரிமையும் இல்லை. எதிர்க் கட் சியில் நிலவி வருவதுபோல் நானே பிரதமராக வருவேன் என கூறிக் கொண்டு யாரும் முன்வரமுடியாது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் அம்னோ தலைவர் மட்டுமே நாட்டின் பிரதமராக பதவி ஏற்று வந்துள்ளார். காரணம் அம்னோ மட்டுமே நாடாளுமன்றத்தில் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார். பெர்லிஸிலுள்ள 2020 மண்டபத்தில் சுமார் 3 ஆயிரம் அம்னோ உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் இவ்வாறு உரை யாற்றினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்