img
img

என் கடினமான் உழைப்பில் நான் வெற்றிபெற்றேன். லாவண்யா பெருமிதம்
வியாழன் 22 ஜூன் 2017 13:14:29

img

வெற்றி நம் வாசலை ஒரு நாள் நிச்சயம் தட்டும் என தேசிய அளவில் நடைபெற்ற நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் செனி நெகாராகூ ஓவியப் போட்டி யின் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் முதல் நிலையில் வெற்றி வாகை சூடிய மாணவி லாவண்யா முரளி கூறுகிறார். நேற்று முன்தினம் தலைநகரில் நடைபெற்ற இந்த பரிசளிப்பு நிகழ்வின் போது பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிடமிருந்து 5 ஆயிரம் வெள்ளிக்கான முதல் பரிசை பெற்றபோது உள்ளம் பெரும் ஆனந்தத்தில் மூழ்கிய தாக ஜொகூர்பாரு கான்வெண்ட் இடைநிலைப்பள்ளியின் 4ஆம் படிவ மாணவியுமான லாவண்யா முரளி தெரிவித்தார். தன் பெற்றோர் தான் மூன்று வயதாக இருக்கும் போதே ஓவிய வகுப்புகளில் பங்கு கொள்ள தூண்டியதன் அடிப்படையில் ஓவியத் துறையில் மிகுந்த ஆர் வம் கொண்டதாக குறிப்பிட்ட அவர் சிறுவயது முதற்கொண்டே ஆங்காங்கு நடக்கும் ஓவியப் போட்டிகளில் பங்குகொண்டு வெற்றி வாகை சூடியதையும் நினைவு கூர்ந்தார். மொத்தம் 10 ஆயிரத்து 126 பள்ளிகளிலிருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஓவியப் போட்டியில் பங்கு கொண்டதாக குறிப்பிட்ட லாவண்யா முரளி மூன்று பிரிவுகளுக்கான போட்டிகளில் இடைநிலைப்பள்ளிகளின் வெற்றியாளராகதான் அறிவிக் கப்பட்டபோது ஒரு இந்திய மாணவி தேசிய அளவில் வெற்றி பெற்றதை மிகவும் பெருமையாக எண்ணிக் கொண்டதாக குறிப்பிட்டார். ஓவியத் துறையிலும் முன்னேற முடியும் என்பதற்கு தான் ஒரு சான்று என குறிப்பிட்ட லாவண்யா முரளி ஓவியத்துறை இந்திய மாணவர்களுக்கு கை வந்த கலையாக இருப்பதால் இத்துறையை இந்திய மாண வர்கள் புறக்கணித்து விடக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டார்.தன் தந்தை எஸ்.முரளி தாயார் சுஜாதா மேனன் ஆகியோருக்கு தான் எப்போதும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக தெரி வித்த அவர், தனது பெற்றோரின் துணையின்றி ஊக்க மின்றி தான் வெற்றி பெற முடியாது எனவும் குறிப்பிட்டார். ஓவியத் துறையில் பட்டம் பெற வேண்டும் என்பது தனது லட்சியம் என குறிப்பிட்ட லாவண்யா முரளி தனது வெற்றியை பெற்றோருக்கும் இந்திய சமு தாயத்திற்கும் பகிர்ந்தளிப்பதாகவும் குறிப்பிட்டார்.இதனிடையே தனது மகளின் வெற்றியை பெருமையுடன் குறிப்பிட்ட ஜொகூர்பாரு அருள்மிகு இராஜமாரியம்மன் தேவஸ்தான பொருளாளருமான லாவண்யாவின் தந்தை எஸ்.முரளி மகளின் வளர்ச்சிக்கு தன் மனைவி சுஜாதா மேனன் பெரும் பங்காற்றியுள்ளதாக குறிப்பிட்டார். சிறு வயதிலேயே வரைவதில் காட்டி வந்த ஆர்வம் காரணமாக அத்துறையில் அவருக்கு தாங்கள் ஊக்கம் காட்டி வந்ததாக குறிப்பிட்ட எஸ்.முரளி நாட் டின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானின் படத்தை வரைந்து போட்டிக்கு அனுப்பியதன் வழி இந்த வெற்றியை அவரால் பெற முடிந்ததாக குறிப் பிட்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img