பெட்டாலிங்ஜெயா, பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எப்ஜிவி) நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ இசா சமாட்டிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அழைத்து இருக்கிறது. இசாவும் அவரின் துணைவியார் புவான்ஸ்ரீ பிபி ஷர்லிஸா முகமட் காலிட்டும் இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு புத்ரா ஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்கு வருவர் என்பதை எம்ஏசிசி துணை தலைமை ஆணையர் (நடவடிக்கை) டத்தோ அஸாம் பக்கி உறுதிப்படுத்தினார். எம்ஜிவியில் முறைகேடும் அதிகார துஷ்பிரயோகமும் நிகழ்ந்து இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்த நிறுவனத்தை எம்ஏசிசி புலன் விசாரணை செய்து வருகிறது.எம்ஜிவி நிர்வாகத்தில் ஏற்பட்ட ஒரு நெருக்கடியால் குழுமத் தலைவரும் தலைமை செயல்முறை அதிகாரியுமான டத்தோ ஸக்காரியா அர்ஷாட்டும் மூன்று முக்கிய நிர்வாக அதிகாரிகளும் விடுப்பில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டனர். தரை பொதுப் போக்குவரத்து ஆணையத்தின் (ஸ்பாட்) இடைக்கால தலைவராக இசாவும் எப்ஜிவியின் இடைக்கால தலைவராக டான்ஸ்ரீ சுலைமான் மஹ்போப்பும் பொறுப்பு ஏற்பர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் திங்கட்கிழமை தெரிவித்தார். எம்ஏசிசி ஜூன் 8ஆம் தேதி எப்ஜிவி தலைமை யகத்தில் எட்டு மணி நேர சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்