img
img

ஆட்டுக்கறி குழம்பில் மாட்டுக்கறியைக் கலப்பதா?
புதன் 21 ஜூன் 2017 13:10:06

img

பி.ஏ.கந்தையா தெலுக் இந்தான், இங்குள்ள உணவகத்தில் ஆட்டுக்கறியில் மாட்டுக் கறியைக் கலந்து விற்பனை செய்ததாக 1983ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப் பட்ட உணவக உரிமையாளரான சுப்பிரமணியம் ராமுலு என்பவருக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 4,500 வெள்ளி அபராதம் கட்டத் தவறினால் 5 மாதச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இத்தீர்ப்பினை மாஜிஸ்திரேட் இந்தான் நூருல் ஃபரேனா பிந்தி ஜைனல் அபிடின் வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட சுப்பிர மணியத்தின் சார்பில் பிரபல வழக்கறிஞர் சிவநேசனும் அவருக்கு உதவியாக இளம் வழக்கறிஞர் பிரான்சிஸ் சின்னப்பனும் ஆஜராகினர்.பிராசிகியூஷன் சார்பில் சுகாதார அமைச்சைச் சேர்ந்த குமார குருபரன் ஆஜராகியிருந்தார். குற்றம் சாட் டப்பட்ட சுப்பிர மணியம் இங்குள்ள பண்டார் பாருவில் செயல்பட்டு வந்த அவரின் ஹைதரா பாத் கறி ஹவுஸ்சில் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி தம்முடைய உணவகத்தில் ஆட்டுக்கறியில் மாட்டுக்கறியைக் கலந்து விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. சுப் பிரமணியம் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியிருந்தார். இவ்வழக்கில் சுப்பிரமணியம் குற்றவாளி என்று பிராசிகியூஷன் தரப்பு போதிய ஆதாரப்பூர்வ சாட்சியங்களுடன் நிரூபித்துள்ளதால் இவருக்கு 4,500 வெள்ளி அபராதம் விதிப்பதாகவும் கட்டத் தவறினால் ஐந்து மாத சிறைத்தண்டனை விதிப்பதாகவும் மாஜிஸ்திரேட் இந்தான் நூருல் ஃபரேனா பிந்தி ஜைனல் அபிடின் வழங்கினார். இந்த வழக்கினை ஈப்போ உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருப்பதாக குறிப்பிட்ட வழக்கறிஞர் சிவநேசன், மலேசிய இந்திய உணவ கங்களுக்கு எதிராக செய்யாத குற்றத்திற்கு இன்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இதனைக் கருப்பு தினமாக அனுசரிக்க வேண்டும். எந்த வொரு உண்மையான இந்துவும் மாட்டுக்கறியைக் கையால் கூட தொடமாட்டார்கள். அப்படிப்பட்ட இந்து ஒருவ ருக்கு எதிராக இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து தெலுக் இந்தான் நகரில் ஜாலான்பண்டார் வெண் ணிலா விலாஸ் உணவகம் பாபா நாசி கண்டார் ஜாலான் மங்கிஸ் பாறு விலாஸ் உணவகம் ஆகிய உணவக உரிமை யாளர்களுக்கு எதிராகவும் இதே போன்று வழக்கு தொடுக்குப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை பிறகு ஒரு நாளில் நடைபெறும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img