img
img

பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மலேசிய நண்பன் முன்னெடுக்கும்
செவ்வாய் 20 ஜூன் 2017 14:43:20

img

கோலாலம்பூர், ஓய்வு பெற்ற இந்திய அரசாங்கப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மலேசிய நண்பன் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ ஷாபி ஜமான் நேற்று கூறினார்.மலேசிய ஓய்வு பெற்ற இந்திய அரசாங்க பணியாளர்கள் சங்கத்தின் ஆண்டுக் கூட்டம் நேற்று முன் தினம் தலைநகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு டத்தோ ஷாபி சிறப்புரையாற்றினார்.ஓய்வு பெற்ற இந்திய அரசாங்க பணியாளர்களை ஒன் றிணைக்கும் நோக்கில் இச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.இச்சங்கத்தை உருவாக்கிய டாக்டர் அந்தோணி உட்பட அனைத்து நிர்வாக குழுவினருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஓய்வு பெற்றபின் அரசாங்க பணியாளர்கள் பல பிரச்சினை களை எதிர்நோக்குகின்றனர் என்று அதன் தலைவர் அந்தோணி தமது உரையில் கூறினார். இப்பணியாளர்கள் எதிர்கொள் ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை அது குறித்து செய்திகளை வெளியிட மலேசிய நண்பன் நாளிதழ் தயாராக உள்ளது. அதே வேளையில் இச்சங்கத்தின் முயற்சிகளுக்கும் மலேசிய நண்பன் துணையாக இருக்கும் என்றும் டத்தோ ஷாபி ஜமான் செய்தி யாளர்களிடம் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img