சென்னை: தமிழக சட்டமன்றத்திலிருந்து எதிர்கட்சியான தி.மு.க வெளிநடப்பு செய்துள்ளது. அ.தி.மு.க உறுப்பினர் ஓ.எஸ்.மணியனின் நேற்றைய பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு தி.மு.க உறுப்பினர்கள் கோரினர். அவை துவங்கியதும் இக்கோரிக்கை குறித்து எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார், இக்கேள்விக்கு சபாநாயகர் பதில் சொல்லாததால் தி.மு.க உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சபாநாயகர் தனபால் சர்வாதிகார அடிப்படையில் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். அவை முன்னவர் பதில் சொல்லி முடித்த பிரச்சனையை ஓ.எஸ்.மணியன் பேசியதை தான் தி.மு.க உறுப்பினர்கள் எதிர்த்ததாக குறிப்பிட்டார். நீதிமன்றத்தில் இருக்கும் பிரச்சனையை மணியன் பேசினார். நாங்களும் பெங்களூரில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி பேசலாமா என வினவினோம். ஆனால் சபாயாகர் எங்களது பேச்சை மட்டும் அவைக் குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிட்டதாக ஸ்டாலின் புகார் கூறினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்