ஜேம்ஸ் கந்தையா சிகாமாட், ஜொகூர் மாநில சுகாதார இலாகா அமலாக்க பிரிவினர் 1,144 உணவகங்களின் மீது மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில் தூய்மையின்மை காரணத்தினால் 57 கடைகள் மூடப்பட்டுள்ளதாக ஜொகூர் அரசு (EXCO) ஆட்சிக் குழுஉறுப்பினர் டத்தோ ஆயுப் ரஹ்மாட் தெரிவித்தார். அண்மையில் ரம லான் சந்தையில் ஒரு தற்காலிக சிறு கடையில் நச்சுத்தன்மை வாய்ந்த உணவை விற்றதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனைக்குப் பின்னர், அக்கடை மூடப்பட்டதாக தெரிவித்தார். மேலும், தூய்மையான இடத்தில் உணவுகளை சமைக்க கடைப்பிடிக்கத் தவறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என டத்தோ ஆயுப் ரஹ்மாட் எச்சரித்தார்.இந்நிலையில் ஜொகூர் மாநில சுகாதார இலாக்காவின் அமலாக்க அதிகாரிகள் 1434 உணவகங்களில் அதிரடி சோதனை நடத் தினர். இதில் சுகாதாரமின்றி செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் 57 உணவகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு அதன் அமலாக்க அதிகாரி கள் உத்தரவு பிறப்பித்தனர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்