பெட்டாலிங் ஜெயா, தனக்கு எதிராக அடிப்படை யற்ற குற்றச்சாட்டுகளை தொடுப்பவர்கள் மீது வழக்கு தொடுப்பேன் என்று டத்தின்ஸ்ரீ ரோஸ் மா மன்சோர் எச்சரித்துள்ளார். அடிப்படையற்ற மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் இலக் காகி வருகிறார் என்று நூர் ஹஜ்ரான் முகமது நூர் வழக்கறிஞர் நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்தகைய தாக்குதல் எல்லாம் போலியான குற்றச்சாட்டுகளை தாங்கி வருபவை. ரோஸ்மாவின் நல்தோற்றத்திற்கு களங்கம் கற்பிப்பவை. இவரின் நற் பெயருக்கு மாசுபடுத்தும் நோக்கில் இவை எல்லாம் செய்யப்படுகிறது.சமூக வலைத்தளங்களில் காணப்படும் இதுபோன்ற அவதூறுகளை நாங்கள் அணுக் கமாக கண்காணித்து வருகிறோம். அவதூறான மற்றும் பொய்யான அறிக்கைகள் விடுப்பது குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த வழக்கறிஞர் நிறுவனம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்