மாணவர் நவீன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைவருக்கு வழங்கப்படும் தண்டனை மற்ற இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என சுபாங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினர் மோகன் சிங் தெரிவித்தார். சமீப காலமாக நாட்டில் பகடிவதை சம்பவத்தால் உயிர் பலி ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த கொடுமையான செயலில் ஈடுபடுபவர் கள் எந்தவித பயமுமின்றி செயல்பட்டு வருகின்றனர். நவீன் கொலை வழக்குடன் இந்த செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் கடுமையாக தண்டனை விதிக்கப்பட வேண்டும். இது மற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகவும் அதிலும் தீயச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாகவும் அமைய வேண்டும் என அவர் சொன்னார்.பள்ளி பருவத்தில் நன்னெறி பண்புகளை படித்து அதனை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். இதனை அனைவரும் கடைப்பிடித்தால் நாட் டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனை நவீன் குடும்பத்தினருக்கு ஆறுதலாக அமையும் வண்ணம் இருக்க வேண்டுமென மோகன் சிங் கேட்டுக் கொண்டார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்