பெட்டாலிங்ஜெயா, சரவா முகா பகுதியில் உள்ள பள்ளி ஆசிரியர் ஒருவர் ஒரு மாணவரை 50க்கும் மேற்பட்ட முறையில் ஓரின உறவில் உட்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டிலிருந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் இந்த துர்நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். தனக்கு நேர்ந்து வரும் இந்த இழி வான நடவடிக்கை குறித்து மாணவர் மற்றொரு ஆசிரியரிடம் முறையிட்டார். இந்த சித்ரவதையினை சகிக்க முடியாத மாணவர் போலீசில் புகார் செய்துள்ளார். இதனை அறிந்த சந்தேக பேர்வழி பையனை படாத பாடுபடுத்தியுள்ளார். ஆசிரியருக்கு பயந்து கொண்டு மாணவர் மௌனம் காத்து வந்தார் என்று முகா மாவட்ட போலீஸ் தலைவர் துணை சூப்ரிண்டெண்டன் ஜிம்மி பன்யாங் தெரிவித்தார். கபிட்டில் உள்ள ஒரு கிராமப்புறப் பள்ளியில் சந்தேகப் பேர்வழி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இன்று இவர் முகா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுவார்.குற்றவியல் சட்டத்தின் கீழ் இவர் மேற்கொண்டு விசாரிக்கப்படுவார். குற்றச் சாட்டு நிரூபிக்கப்படுமானால் ஆசிரிய ருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனையும் பிரம்படி தண்டனையும் விதிக்கப்படும்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்