கோலாலம்பூர், கூந்தல் சிகிச்சைக்காக தாங்கள் வெ.3 லட்சத்தை செலவழித்து ஏமாந்ததுதான் மிச்சம் என்று இரு சகோதரிகள் புகார் செய்துள்ளனர். பெட்டாலிங் ஜெயா வில் உள்ள சம்பந்தப்பட்ட கூந்தல் பராமரிப்பு மையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக எலிசபெத் சோவ் என்ற 47 வயது பெண் நேற்று ம.சீ.ச புகார் மையத்தில் கூறினார். தனது கடன் அட்டையை 13 தடவை பயன்படுத்தி 264,048 வெள்ளியைச் செலுத்தியதாகவும், அதே சமயம் தனது சகோதரி மார்கிரெட் (56) வெ.30,823.73-ஐ கட்டணமாகச் செலுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அம்மையம் வழங்கிய பல்வேறு சலுகைகளுக்காக தாங்கள் இக்கட்ட ணத்தைச் செலுத்திய தாகவும் அவர் சொன்னார். இவ்வளவு பணத்தை செலவழித்தும் தங்கள் கூந்தலில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்று அவர் மேலும் கூறினார். அழகு சிகிச்சை விளம்பரங் களை நம்பி பணத்தை விரயமாக்க வேண்டாம் என்று மசீச புகார் மையத்தின் தலைவர் டத்தோஸ்ரீ மைக்கல் சோங் ஆலோசனை கூறினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்