img
img

மலேசியாவில் மரணித்த பாண்டியனின் பிரேதம் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
ஞாயிறு 11 ஜூன் 2017 12:51:31

img

(பெருஜி பெருமாள்) கோலாலம்பூர், தமிழகத்தின் ஐயனார் வயலை சேர்ந்த 40 வயது பாண்டியன் சுப்பிரமணியம் என்பவர் சுற்றுலா விசாவின் பேரில் குறுகிய கால வருகை மேற் கொண்டிருந்தார். செந்தூல் ஜாலான் கோவில் ஹிலிர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்த இவருக்கு காய்ச்சல் கண்டது. பிறகு நெஞ்சு வலி யால் பாதிக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது. நேற்று காலை 9.30 மணியளவில் இங்குள்ள பொதுமக்களில் ஒருவர் பாண்டியன் இறந்து கிடக்கிறார் என்ற தகவலை மலேசிய உலக மனித நேய கழ கத்தின் தலைவர் த.கமலநாதனுக்கு, 016-9744404 என்ற எண்ணில் தெரிவித்தார். உடனடியாக ஆம்புலன்ஸ வாகனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. போலீசாரும் வந்து பிரேதத்தை பரிசோதனை செய்தனர். தமிழகத்தில் உள்ள பாண்டியன் குடும்பத் தினருக்கும் தகவல் பறந்தது. த.கமலநாதன் பாண்டியனின் துணைவியார் கனகவல்லியிடம் விவரத்தை தெரிவித்தார். தனது கணவரின் உடலை தயவு செய்து தமிழகத்திற்கு அனுப்பி வையுங்கள் என்று கனகவல்லி கண்ணீர் மல்க த.கமலநாதனிடம் மன்றாடினார். பிரேதத்தை பத்திரமாக தமிழகத்திற்கு அனுப்பி வைக்க மலேசிய உலக மனிதநேய கழகம் மளமளவென காரியங்கள் ஆற்றி வருகிறது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img