img
img

விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள்|5 மாணவர்கள் உட்பட 22 பேர் கைது!
ஞாயிறு 11 ஜூன் 2017 12:03:00

img

கோலாலம்பூர் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் உட்கொண்ட 4 இடைநிலைப்பள்ளி மாணவர்கள், மேற்கல்விக்கூட மாணவர் உட்பட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.தலைநகரிலுள்ள அடுக்குமாடி வீட்டில் கடந்த புதன் கிழமை டாங் வாங்கி காவல் நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் இச்சோதனையை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்த 13 முதல் 30 வயதுடையவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில் அனைவரும் போதைப்பொருள் உட் கொண் டிருந்தது தெரியவந்ததாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சுக்ரி கமான் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் போதைப் பொருள் விநியோகஸ்தர் என போலீஸ் நம்புகிறது. சோதனை மேற்கொள்ளப்பட்ட வீட்டிலிருந்து 26 எராமின் 5 போதை மாத்திரைகள், 14 எக்ஸ்டாசி போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தலைநகரில் மாணவர்களும் இளைஞர்களும் தனிப்பட்ட முறை யில் நடத்தும் அனைத்து விருந்து நிகழ்ச்சிகளையும் போலீசார் கண்காணித்து வருவதாக முகமட் சுக்ரி கமான் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img