ஜோர்ஜ்டவுன், எனது மகளின் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள தமிழகத்திலிருந்து புறப்பட்டு வந்த, எனது அருமை நண்பர் வைகோ-வை, விசா அளித்துவிட்டு, நாட்டுக்குள் நுழைய விடாமல், தடை விதித்து, திருப்பி அனுப்பும் மலேசிய அரசாங்கத்தின் முடிவை நான் கடுமையாக கண்டிக்கிறேன் என்று பேரா சிரியர் இராமசாமி கூறினார். பினாங்கில் நடைபெறவிருக்கும் தமது மகளின் திருமண வரவேற்புக்கு வருகை புரிந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ-வை, விசா அனுமதி அளித்தும், நாட்டிற்குள் நுழைய விடாமல், திருப்பியனுப்பும் மலேசிய அரசாங்கத்தின் முடிவை, பேராசிரியர் இராமசாமி கடுமையாக கண்டித்தார். இந்நாட்டிற்குள், யார், யாரோ வருகிறார்கள்; சில நேரங்களில் தீவிரவாதிகள் கூட நாட்டுக்குள் நுழைகிறார்கள், அவர்களையெல்லாம் தடுக்காத மலேசிய அரசாங்கம், ஒரு சமூக போராட்டவாதியான, வைகோவை தடுப்பது, எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று அவர் கூறினார். இந்தியாவின் மூத்த அரசியல்வாதி, ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை மலேசிய குடிநுழைவுத்துறை இவ்வாறு நடத்தியதை கடுமையாக கண்டித்த அவர், ஒரு திருமண அழைப்பில், வைகோ பங்கேற்றால், நாட்டில் என்ன பாதுகாப்பு அச்சுறுத்தல் நிகழ்ந்து விடப்போகிறது என்றும் கேள்வி யெழுப்பினார். வைகோவின் மலேசிய பயணம் முற்றிலும், தனிப்பட்ட வருகையாகும்; அதில் எந்த அரசியலும் இல்லை; அதற்கு ஏன் மலேசிய அரசு தடைவித்தது என்பது, புரியாத புதிராக உள்ளது. இந்த தடைக்குப் பின்னால், யார் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுவதாக பேராசிரியர் இராமசாமி தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்