img
img

கடப்பிதழ் இல்லாததால் தாயகம் திரும்ப இயலவில்லை
செவ்வாய் 06 ஜூன் 2017 15:50:57

img

கோலாலம்பூர் ஏறத்தாழ 11 வருட காலமாக கடப்பிதழ் இல்லாத காரணத்தால் ஆரோக்கியமேரி தமிழகம் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். போலி ஏஜெண்டுகள் இவரை வீட்டுப் பணிப் பெண்ணாக இங்கு வரவழைத்து அநேக இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார். என்ன செய்வது ஏது செய்வது என்று தடுமாறிக் கொண்டிருந்த ஆரோக்கிய மேரி இறுதியாக மலேசிய உலக மனித நேயத்தின் தலைவர் த.கமலநாதனின் உதவியினை நாடினார். ஆரோக்கிய மேரிக்கு எந்த வொரு குடியுரிமையும் இல்லை. எனவே, கமலநாதன் நேரடியாக தமிழகம் சென்று இவரின் உறவினர்கள் மூலமாக தக்க ஆவ ணங்களை சேகரித்தார். ஆரோக் கிய மேரியின் தந்தை இறந்து விட்டார். அவருக்கு ஜெயந்தி, பிரியா, ஜான்சி என்ற மூன்று பெண் பிள்ளைகள். தன் பெரியம்மா ஆரோக்கியமேரியினை காண வேண்டும் என்று மூன்று பிள்ளைகளும் தவியாய் தவிப்பதை பார்க்க படுபரிதாபமாக இருக்கிறது. தமிழகத்தில் பெற்ற சம்பந்தப் பட்ட ஆவணங்களைக் கொண்டு கமலநாதன் ஆரோக்கிய மேரியினை இங்குள்ள இந்திய தூதரகத்திற்கு அழைத்துச் சென்று தமிழகம் திரும்ப தக்க ஏற்பாடுகளை செய்தார். உடனே தற்காலிக அட்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆரோக்கிய மேரியின் அநேக இன்னல்கள் முடி வுக்கு வந்தது. விரைவில் இவர் தாயகம் திரும்புவார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img